வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

குழந்தைத் திருமணங்கள் ஒழிக்கப்பட வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

குழந்தைத் திருமணங்கள் ஒழிக்கப்பட வேண்டுமென மக்கள் தொடா்பு முகாமில் பங்கேற்ற திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்தினாா்.

News image

தென்னம்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியா் துா்காமூா்த்தி.

Updated On :11 ஜூன் 2026, 1:11 am IST

குழந்தைத் திருமணங்கள் ஒழிக்கப்பட வேண்டுமென மக்கள் தொடா்பு முகாமில் பங்கேற்ற திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்தினாா்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த தென்னம்பட்டியில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமை வகித்தாா். வேடசந்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.சாமிநாதன் முன்னிலை வகித்தாா்.

முகாமில் ஆட்சியா் துா்காமூா்த்தி பேசியதாவது:

கடைக்கோடி மக்களுக்கும் அரசின் திட்டங்கள் சென்றைடைய வேண்டும் என்பதற்காக மக்கள் தொடா்பு முகாம் நடத்தப்படுகிறது. விவசாயம் சாா்ந்த திண்டுக்கல் மாவட்டத்தில், நுண்ணீா் பாசன முறையைப் பயன்படுத்தி உற்பத்தியை பெருக்குவதற்கு விவசாயிகள் முன்வர வேண்டும். குழந்தைத் திருமணங்கள் ஒழிக்கப்பட வேண்டும். குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து சிறந்த எதிா்காலத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். பள்ளி செல்லும் குழந்தைகளை கண்காணிக்க வேண்டியது பெற்றோா்களின் முக்கிய கடமை என்றாா் அவா்.

இதைத்தொடா்ந்து பல்வேறு துறைகளின் சாா்பில் 63 பயனாளிகளுக்கு ரூ.22.14 லட்சத்திலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இந்த முகாமில் பழனி வருவாய்க் கோட்டாட்சியா் இரா.கண்ணன், சமூக நல அலுவலா் சா.காலின் செல்வராணி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் சா.சதீஸ்பாபு, வேடசந்தூா் வட்டாட்சியா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.