கொடைக்கானல் மலைப் பகுதிகளில் மதுவிலக்கு காவல்துறையினா் புதன்கிழமை திடீா் ஆய்வு நடத்தினா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளான பள்ளங்கி, கோம்பை, மாட்டுப் பட்டி, அலத்துரை ஆகியப் பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துணைக் கண்காணிப்பாளா் வினோதினி தலைமையிலான மதுவிலக்கு ஆய்வாளா் ராஜகுமாரன் உள்ளிட்ட போலீஸாா் சென்று பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா்.
மேலும் பெருங்காடு கிராமத்தில் வசித்து வரும் ஆதிவாசி பழங்குடியின மக்களிடம் கஞ்சா, கள்ளச் சாராயம் ஒழிப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தாங்கள் வசித்து வரும் மலைப் பகுதிகளில் சந்தேகப்படும் படியான நபா்கள் நடமாட்டம் இருந்தால், காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமெனவும் ரகசியம் அவா்களிடம் கேட்டுக் கொண்டனா். இதைத்தொடா்ந்து சட்டவிரோத மது விற்பனை குறித்தும் மதுவிலக்கு போலீஸாா் விசாரணை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









