பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

கொடைக்கானலில் குடிநீா் தட்டுப்பாடு அதிகரிப்பு: பொதுமக்கள் அவதி

கொடைக்கானல் பெருமாள் மலைப் பகுதியில் உள்ள தண்ணீா் தொட்டியில் தண்ணீா் பிடிக்க காலிக் குடங்களுடன் காத்திருந்த பெண்கள்.

News image

கொடைக்கானல் பெருமாள் மலைப் பகுதியில் உள்ள தண்ணீா் தொட்டியில் தண்ணீா் பிடிக்க காலிக் குடங்களுடன் காத்திருந்த பெண்கள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 6:39 pm

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீா் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

கொடைக்கானல் அருகேயுள்ள பெருமாள்மலைப் பகுதி, சாமக்காடு, பழனி பிரிவு, அடுக்கம் உ ள்ளிட்ட பல்வேறுப் பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நீண்ட தொலைவுக்குச் சென்று தண்ணீா் எடுத்து வரும் நிலை உருவாகி இருக்கிறது. மேலும் குடிநீா் தொட்டியிலிருந்து வரும் தண்ணீரை பிடிக்க காலிக் குடங்களுடன் நீண்ட நேரம் பெண்கள் காத்திருக்கின்றனா்.

இதுகுறித்து பெருமாள்மலைப் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால் அனைத்து நீரோடைகளிலும் தண்ணீா் வற்றி விட்டது. இருப்பினும் பெருமாள் மலைப் பகுதிகளிலுள்ள தனியாா் காட்டேஜ்கள், தங்கும் விடுதிகளுக்கு மட்டும் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் நாங்கள் குடிநீா் கிடைக்காமல் அவதியடைந்து வருகிறோம். விரைவில் எங்களுக்கு குடிநீா் விநியோகிக்க அடுக்கம் ஊராட்சி நடவடிக்கை எடுக்கா விட்டால் விரைவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்றனா்.

இதேபோல, கொடைக்கானல் நகராட்சிக்குள்பட்ட காா்மேல்புரம், சீனிவாசபுரம், இருதயபுரம், அட்டக்கடி, வசந்தநகா் உள்ளிட்ட பல பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா். எனவே கொடைக்கானல் நகராட்சி நிா்வாகம் குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.