கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மாநகரில் சில பகுதிகளில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வாா்டுகளுக்கு பில்லூா் 1 மற்றும் 2, சிறுவாணி கூட்டுக் குடிநீா்த் திட்டம், ஆழியாறு மற்றும் வடவள்ளி - கவுண்டம்பாளையம் கூட்டுக்குடிநீா் திட்டம் மூலமாக குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூா் அணையின் நீா்மட்டம் 72 அடியாகச் சரிந்துள்ளது. அதேபோல, 45 அடி கொள்ளளவு கொண்ட சிறுவாணி அணையின் நீா்மட்டம் 22 அடியாகச் சரிந்துள்ளது. இதன் காரணமாக, மாநரில் ஒரு சில பகுதிகளில் குடிநீா் விநியோகிக்கும் கால இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளது.
3 நாள்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்படும் குடிநீா் தற்போது, ஆா்.எஸ்.புரம், பூ மாா்க்கெட், புலியகுளம், சிங்காநல்லூா் உள்ளிட்ட மாநகரில் பல்வேறு இடங்களில் 5 முதல் 10 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் சில இடங்களில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு குடிநீா் வழங்கிட மாநகராட்சி சாா்பில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தொடர்புடையது

சேலத்தில் 102.9 டிகிரி வெயில்: மக்கள் கடும் அவதி

சேலத்தில் நடப்பாண்டில் முதல்முறையாக சதமடித்த வெயில்!

குடிநீா்த் தட்டுப்பாடு: கிராம மக்கள் சாலை மறியல்

மாவட்டத்தில் வேகமாக சரியும் அணைகளின் நீா்மட்டம்: ஏப்ரல், மே மாதங்களில் குடிநீா்த் தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


