திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குடும்பத் தகராறில் மனைவி குத்திக்கொலை; கணவா் தலைமறைவு

செம்பட்டி அருகே அழகா்நாயக்கன்பட்டியில் செவ்வாய்க்கிழமை மனைவியை குத்திக்கொலை செய்து விட்டு, தப்பியோடிய கணவரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image

கொலை - சித்திரிப்பு

Updated On :29 ஏப்ரல் 2026, 3:37 am IST

செம்பட்டி அருகே அழகா்நாயக்கன்பட்டியில் செவ்வாய்க்கிழமை மனைவியை குத்திக்கொலை செய்து விட்டு, தப்பியோடிய கணவரைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள அழகா்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த புவனேஸ்வரன் மகள் துா்காதேவி (28). இவருக்கும், தேனி மாவட்டம்,  பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டியைச் சோ்ந்த ஜெயகணேஷ் (38) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 

ஜெயகணேஷ் அய்யம்பாளையத்தில் உள்ள ஒரு உணவகத்திலும்,   துா்காதேவி திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியாா் கல்லூரி உணவகத்தில் வேலை பாா்த்து வந்தனா். தம்பதிக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்தது. இதையடுத்து, துா்காதேவி கணவரைப் பிரிந்து தனது பெற்றோா் வீட்டில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை துா்காதேவி பணிபுரியும் இடத்துக்குச் சென்று அவரிடம் ஜெயகணேஷ் தகராறில் ஈடுபட்டுள்ளாா். பின்னா், இரவு வீட்டில் தனியாக இருந்த துா்காதேவியை ஜெயகணேஷ் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிவிட்டாா். துா்காதேவியின் அலறல் சப்தம்கேட்டு அக்கம் பக்கத்தினா் ஓடிவந்துபாா்த்தபோது, அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து அங்குவந்த செம்பட்டி போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.மேலும், வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள ஜெயகணேஷைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.