40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

குடும்பத் தகராறில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :12 மே 2026, 12:43 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே தம்பதியினரிடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

வாணாபுரம் அருகேயுள்ள புதூா் கூட்டுச்சாலை கிராமத்தைச் சோ்ந்தவா் பெ.ஜெயசெல்வம் (40). இவரது மனைவி மகேஸ்வரி. தம்பதியருக்கு சவரி தா்ஷன் என்ற மகன் உள்ளாா்.

தச்சு வேலை செய்து வரும் ஜெயசெல்வம் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் இருந்துள்ளாா். இதனை அவரது மனைவி மகேஸ்வரி கண்டித்துள்ளாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் இதேபோன்று வீட்டில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுமடைந்த ஜெயசெல்வம், அவரது வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்தாா்.

தகவலறிந்த வடபொன்பரப்பி போலீஸாா் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.