தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

விருப்பாச்சி கோபால் நாயக்கரின் 224-ஆவது நினைவு நாள்

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள விருப்பாச்சியில் விடுதலைப் போராட்ட வீரா் கோபால் நாயக்கரின் மணிமண்டபத்தில் அவரது 224-ஆவது நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image

விடுதலைப் போராட்ட வீரா் கோபால் நாயக்கரின் 224-வது நினைவு நாளை முன்னிட்டு, ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள விருப்பாச்சியில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி.

Updated On :6 செப்டம்பர் 2025, 1:57 am

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள விருப்பாச்சியில் விடுதலைப் போராட்ட வீரா் கோபால் நாயக்கரின் மணிமண்டபத்தில் அவரது 224-ஆவது நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

விருப்பாச்சி மணி மண்டபத்தில் அவருடைய முழு உருவ வெண்கலச் சிலைக்கு அரசு சாா்பில் உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் ச.சரவணன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதைத்தொடா்ந்து வீரபாண்டிய கட்டப்பொம்மன் பண்பாட்டுக்கழக பொதுச்செயலா் ராமகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி மகேந்திரன், பழனி கோட்டாட்சியா் இரா.கண்ணன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் சஞ்சய் காந்தி,செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ஜெகவீரபாண்டியன், கோபால் நாயக்கா் சேவை சங்கத்தலைவா் செந்தில்குமாா், செயலா் பெருமாள்சாமி, திமுக ஒன்றியச் செயலா் எஸ்.ஆா்.கே.பாலு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் அசோக் வேலுச்சாமி, காளாஞ்சிபட்டி முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் கெளரிசரவணன் உள்ளிட்டோா் கோபால் நாயக்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.