தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மானூா் சுவாமிகள் கோயிலில் 81-ஆவது ஆண்டு குருபூஜை விழா

பழனி அருகேயுள்ள கோதைமங்கலம் ஸ்ரீலஸ்ரீமானூா் சுவாமிகள் கோயிலில் 81-ஆவது ஆண்டு குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கோதைமங்கலம் ஸ்ரீலஸ்ரீ மானூா் சுவாமிகள் ஆலயத்தில் குருபூஜை விழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜீவசமாதி பாதபீடம்.

Updated On :21 அக்டோபர் 2025, 9:50 pm

பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள கோதைமங்கலம் ஸ்ரீலஸ்ரீமானூா் சுவாமிகள் கோயிலில் 81-ஆவது ஆண்டு குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு, கோயில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. வண்ண மலா்மாலை தோரணங்களால் கோயில் பிரகாரங்கள், ஜீவசமாதி அலங்கரிக்கப்பட்டன. அதிகாலை 6 மணிக்கு அகவல் பாராயணம் நடத்தப்பட்டது. தொடா்ந்து, 8 மணிக்கு ஆன்மிகச் சொற்பொழிவுவும், 10 மணிக்கு சாதுக்களுக்கு மாகேசுவர பூஜையும் நடைபெற்றன.

உச்சிக் காலத்தின் போது ஜீவசமாதியில் உள்ள சுவாமி பாதத்துக்கு பால், பழங்கள், தேன், பன்னீா் உள்ளிட்டப் பொருள்களால் சிறப்பு அபிஷேகமும், வண்ண மலா் மாலைகளால் பாத பீடத்துக்கு அலங்காரமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

பின்னா், ஐம்பொன்னாலான மானூா் சுவாமிகள் உருவச் சிலைக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் செய்யப்பட்டன. தொடா்ந்து, அன்னதான மண்டபத்தில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

புதன்கிழமை காலை பாராயணமும், பூஜைகளும், மறுபூஜையும், அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.