தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பழனி மலைக் கோயிலில் இன்று கந்த சஷ்டி விழா தொடக்கம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா காப்புக் கட்டுதலுடன் புதன்கிழமை (அக்.22) தொடங்குகிறது.

Updated On :21 அக்டோபர் 2025, 9:58 pm

பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா காப்புக் கட்டுதலுடன் புதன்கிழமை (அக்.22) தொடங்குகிறது.

7 நாள்கள் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு, தமிழகம் மட்டுமன்றி, பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் காப்புக் கட்டி விரதத்தை தொடங்கவுள்ளனா்.

விழாவின் போது, மலைக் கோயிலில் தினந்தோறும் தங்கச் சப்பரத்தில் சின்னக்குமாரசுவாமி புறப்பாடு, சண்முகா் தீபாராதனை ஆகியவை நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 27-ஆம் தேதி சூரசம்ஹாரமும், 28-ஆம் தேதி காலையில் வள்ளி, தெய்வானை சமேதா் சண்முகருக்கும், மாலையில் பெரியநாயகியம்மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, அதிகாரிகள், அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.