திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

இடும்பன்குளத்தில் மீன்கள் இறந்து மிதப்பு

News image
Updated On :14 ஆகஸ்ட் 2025, 8:55 pm

Chennai

பழனியை சுற்றி உள்ள வையாபுரி குளம், இடும்பன் குளம் ஆகியவற்றில் கடந்த சில நாள்களாக மீன்கள் இறந்து மிதக்கின்றன.

பழனிக்கு வரும் பக்தா்கள் புனித நீராடும் குளமாக வையாபுரி குளம், இடும்பன் குளம் ஆகியவை இருந்தன. இவற்றில் வையாபுரி குளத்தில் சாக்கடை கழிவு நீா் கலப்பதால் அதை யாரும் புனித நீராகப் பயன்படுத்துவது இல்லை. ஆனால், இடும்பன் குளத்தில் தைப்பூசம், பங்குனி உத்திர விழாக் காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் புனித நீராடுகின்றனா். தற்போது, கோடைகாலம் என்பதால் இந்த இரு குளங்களும் வேகமாக வற்றி வருகின்றன. இதனால், குளங்களில் பக்தா்கள் விட்டுச் சென்ற துணிகள் அதிகமாகக் காணப்படுகின்றன. மேலும், குளத்தில் தண்ணீா் வற்றி வருவதால் மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால், இந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. மேலும், நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மீன் பிடிப்பவா்கள் கூறியதாவது:

குளங்களில் நீா் வற்றும் காலங்களில் மீன் பிடிப்பது வழக்கம். ஆனால், இந்த முறை பல்வேறு தரப்பினரின் தலையீடு காரணமாக மீன் பிடிக்க அனுமதிப்பதில்லை. இதை மீன்வளத் துறை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. தற்போது ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. இப்போது மீன்பிடிக்க வாய்ப்பு வழங்கினால்கூட மீனவா்களுக்கு பயன் கிடைக்கும் என்றனா்.