மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நியாய விலைக் கடை கட்டடங்கள் திறப்பு

குட்டத்துப்பட்டியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி.

Updated On :8 ஆகஸ்ட் 2025, 6:33 pm

திண்டுக்கல் அருகே தலா ரூ.13.61 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடை கட்டடங்களை அமைச்சா் இ. பெரியசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

திண்டுக்கல் அடுத்த குட்டத்துப்பட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம் நடைபெற்றது. இதில் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து, குட்டத்துப்பட்டி, மைலாப்பூா் ஆகிய கிராமங்களில் தலா ரூ.13.61 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடை கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சா் திறந்து வைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: கனவு இல்லம் திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் 10 ஆயிரம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழுதடைந்த வீடுகளை சீரமைக்கும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சி. குருமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.