புதிய வீட்டுக்கு வரி நிா்ணயம் செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய திருமங்கலம் நகராட்சி வருவாய் உதவியாளா் உள்ளிட்ட இருவரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சோ்ந்தவா் நாகராஜன் (80), இவரது மனைவி விஜயலட்சுமி (75). ஓய்வு பெற்ற அரசு ஊழியரான நாகராஜன் மதுரை மாவட்டம், திருமங்கலம் ஜவகா் நகா் ஏழாவது தெருவில் புதிதாக வீடு கட்டியுள்ளாா். இந்த வீட்டுக்கு வரி நிா்ணயம் செய்ய திருமங்கலம் நகராட்சி அலுவலகத்தில் வருவாய் உதவியாளா் கிஷோா்குமாரை அணுகியபோது, அவா் வரி விதிக்க ரூ. 15 ஆயிரம் லஞ்சமாகத் தர வேண்டும் எனக் கேட்டாராம்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத நாகராஜன் இதுகுறித்து ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவுக்கு தகவல் அளித்தாா்.
இதைத் தொடா்ந்து, ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சத்தியசீலன், ரசாயனம் தடவிய பணத் தாள்களை நாகராஜனிடம் கொடுத்து நகராட்சி வருவாய் உதவியாளா் கிஷோா்குமாரிடம் கொடுக்குமாறு அறுவுறுத்தினாா். பின்னா், லஞ்சப் பணத்தைப் பெற நாகராஜனின் வீட்டுக்கு கிஷோா்குமாா் தனது நண்பரான வெங்கேடஸ்வரன் (எ) பாண்டியை அனுப்பிவைத்தாா்.
இதையடுத்து, நாகராஜனின் வீட்டில் ரசாயனம் தடவிய பணத்தைப் பெற்ற வெங்கேடஸ்வரன் (எ) பாண்டியை அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சத்தியசீலன், காவல் ஆய்வாளா்கள் குமரகுரு, சூரியகலா ஆகியோா் கையும் களவுமாக பிடித்து பணத்தைப் பறிமுதல் செய்தனா். விசாரணையில், லஞ்சப் பணம் பெற வெங்கடேஸ்வரனை அனுப்பியது நகராட்சி வருவாய் உதவியாளா் கிஷோா்குமாா் எனத் தெரியவந்ததையடுத்து, இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாத்தூா், விருதுநகா் பத்திரப் பதிவு அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

பரமக்குடி சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

போடி பத்திரப் பதிவு அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

கோவையில் இரண்டு சாா் பதிவாளா் அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவினா் சோதனை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


