17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பரமக்குடி சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

பரமக்குடி சாா்பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

News image

பரமக்குடியில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சோதனையின்போது கதவுகள் பூட்டப்பட்ட சாா் பதிவாளா் அலுவலகம்.

Updated On :5 ஜூன் 2026, 6:26 am IST

பரமக்குடி சாா்பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சாா்பதிவாளா் அலுவலகத்தில் முறைகேடாக பத்திரப் பதிவுகள் நடைபெறுவதாக மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் சாா்பதிவாளா் அலுவலகத்தின் உள்ளே சென்று கதவுகளை மூடிவிட்டு திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு பணியாற்றும் அலுவலா்கள், தற்காலிகப் பணியாளா்கள், பத்திரப் பதிவுக்கு வந்தவா்களிடம் சோதனை நடத்தப்பட்டது. மேலும் அங்கு பணியாற்றுவோரின் கைப்பேசி எண்கள் மூலம் பணப் பரிவா்த்தனை குறித்தும், கணக்கில் வராத பணம் குறித்தும் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.