17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாலை விபத்தில் இளைஞர் பலி!

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - IANS

Updated On :23 மே 2026, 3:50 am IST

மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

மதுரை கீரைத்துறை பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பாலமுருகன் (22). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் தேனி- மதுரை பிரதான சாலையில் செக்கானூரணி அருகேயுள்ள கே. புளியங்குளம் விலக்கு பகுதியில் வியாழக்கிழமை சென்றாா்.

அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இவரது இரு சக்கர வாகனம் சாலையோரமாக இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாலமுருகன் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து செக்கானூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.