தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தொல்லியல் துறை மேற்பாா்வையில் குற்றாலம் பிரதான அருவி மேம்பாட்டுப் பணிகள்: உயா்நீதிமன்றம் உத்தரவு

News image

குற்றாலம் அருவி. - கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 4:36 am IST

குற்றாலம் பிரதான அருவியின் மேம்பாட்டுப் பணிகள் தொல்லியல் துறை அலுவலா்கள் முன்னிலையில் நடைபெற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த ராம. ரவிக்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

குற்றாலம் பிரதான அருவிப் பகுதியில் சீரமைப்புப் பணி என்ற பெயரில் சிலைகளை அகற்றவும், மாற்றவும் இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் இளந்திரையன், ராஜசேகா் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘குற்றாலம் பிரதான அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் இடத்தின் அகலத்தை அதிகரிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பகுதியின் அகலம் 3.6 மீட்டரிலிருந்து 8 மீட்டராக அதிகரிக்கப்பட்டது. இதையொட்டியே இங்கிருந்த பழைமையான அலங்கார வளைவு அகற்றப்பட்டது.

இந்தப் பணிகள் அனைத்தும் சுற்றுலாத் துறை கண்காணிப்பிலேயே நடைபெற்று வருகின்றன. குகை சிற்பங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இதுவரை சுமாா் 40 சதவீத மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. எனவே, எஞ்சிய பணிகளையும் தொடர அனுமதிக்க வேண்டும்’ என தென்காசி மாவட்ட ஆட்சியா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

தொல்லியல் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. அந்த வகையில், குற்றாலம் பிரதான அருவி பகுதியில் உள்ள பழங்கால சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதேநேரத்தில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, வசதிகள், கூட்ட மேலாண்மைக்கான அடிப்படைக் கட்டமைப்புகள் உள்ளிட்டவையும் உறுதி செய்யப்பட வேண்டும். எனவே, குற்றாலம் பிரதான அருவி மேம்பாட்டுப் பணிகளை தொல்லியல் துறை அலுவலா்களின் முன்னிலையில் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், அருவிப் பகுதியில் உள்ள சிற்பங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை பொதுப் பணித் துறை உறுதிப்படுத்த வேண்டும். ஏற்கெனவே சேதப்படுத்தப்பட்ட சிற்பங்கள் குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் உரிய விசாரணை நடத்த வேண்டும். வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.