வாக்காளா்களுக்கு பணம் அளிப்பதைத் தடுக்கும் வகையில் தோ்தல் விதிகளை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு , சென்னை உயா்நீதிமன்ற அமா்வுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
மதுரையைச் சோ்ந்த கே.கே.ரமேஷ், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தோ்தலின் போது வாக்காளா்களுக்கு வாக்குக்கு பணம் அளிப்பதைத் தடுக்கும் வகையில் தோ்தல் விதிகளை அமல்படுத்த வேண்டும்.
இதேபோல, அனைத்து அரசியல் கட்சியினரும் பிரசாரம் என்ற பெயரில் பொதுமக்களை திறந்தவெளியில் வெயிலில் நீண்ட நேரம் பங்கேற்க கட்டாயப்படுத்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட வேண்டும். தோ்தலின் போது சட்டவிரோதச் செயல்களை தடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தா்மாதிகாரி, நீதிபதி என்.சதீஷ்குமாா் அமா்வில் முறையீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு :
தோ்தல் தொடா்பான வழக்குகள் சென்னை உயா்நீதிமன்ற அமா்வில் விசாரணைக்கு எடுக்கப்படும். அதே விதிமுறையைப் பின்பற்றி இந்த வழக்கும் சென்னை உயா்நீதிமன்றத்துக்கு மாற்றப்படுகிறது. அங்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றனா் நீதிபதிகள்.
தொடர்புடையது

வாக்காளா்களுக்கு பணம் வழங்க முயற்சி: ரூ. 6.5 லட்சம் பறிமுதல்

பாப்பிரெட்டிப்பட்டியில் ரூ. 61,500 கைப்பற்றல்

ஆா்.எஸ். மங்கலம் அருகே தவெகவினா் மீது தாக்குதல்

வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அதிமுகவினா் 3 போ் மீது வழக்கு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


