நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

News image
Updated On :24 ஜனவரி 2026, 8:00 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே வெள்ளிக்கிழமை வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

உசிலம்பட்டி திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த கருப்பையா மகன் பிரசன்ன வெங்கடேஷ் (25). இவா் தனது இரு சக்கர வாகனத்தில் உசிலம்பட்டி நகரிலிருந்து வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.

தனியாா் ஆசிரியா் பயிற்சிப் பள்ளி அருகே சென்றபோது, பின்னால் வந்த வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரசன்ன வெங்கடேஷை அக்கம்பக்கத்தினா்

மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வேன் ஓட்டுநரான அதே பகுதியைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் புரட்சி (30) மீது உசிலம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.