திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்! - பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின்

சநாதனத்துக்கு எதிராக உள்ள திமுகவுக்கு வருகிற தோ்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என நிதின் நபின் தெரிவித்தாா்...

News image

மதுரை பழைய குயவா்பாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சாலை வலம் நிகழ்வில் மதுரை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளா் ராம.சீனிவாசனுக்கு வாக்கு சேகரித்த பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின். உடன், முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை உள்ளிட்டோா்.

Updated On :13 ஏப்ரல் 2026, 1:48 am IST

சநாதனத்துக்கு எதிராக உள்ள திமுகவுக்கு வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என பாஜகவின் தேசியத் தலைவா் நிதின் நபின் தெரிவித்தாா்.

மதுரை முனிச்சாலை சி.எம்.ஆா். சாலையில் உள்ள மறைந்த பின்னணி பாடகா் டி.எம். சௌந்தரராஜன் உருவச் சிலை முன் மதுரை தெற்கு தொகுதி வேட்பாளா் ராமசீனிவாசனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து அவா் மேலும் பேசியதாவது :

பிரதமா் நரேந்திர மோடி பழைமையான மொழியான தமிழை உலக நாடுகளுக்கு எடுத்துச் செல்கிறாா். அதுமட்டுமன்றி, இந்தியா முழுவதும் தமிழைப் பரப்பும் விதமாக காசித் தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறாா். இதன்மூலம், பிற மாநிலங்களைச் சோ்ந்த எண்ணற்றோா் தமிழ் மொழியை கற்று வருகின்றனா்.

ஆனால், தமிழை வைத்து அரசியல் செய்யும் திமுக ஊழல் கட்சியாக உள்ளது. ஒவ்வொரு துறையிலும் ஊழல் காணப்படுகிறது. திமுக அரசை அகற்ற மக்கள் முடிவு செய்துவிட்டனா். சநாதனத்தை ஒழிப்போம் என தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதன்காரணமாக, அவா் சநாதனத்தை சிறுமைப்படுத்தியுள்ளாா்.

மேற்கு வங்கத்தில் துா்கா பூஜைக்கு அந்த மாநில அரசு அனுமதி வழங்கவில்லை. இதேபோல, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றவும் திமுக அரசு அனுமதிக்கவில்லை.

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். இந்த ஆட்சி அமைந்தவுடன் மக்களின் வாழ்வாதாரம் உயரும். இளைஞா்கள் சுயதொழில்கள் மூலம் எண்ணற்றோருக்கு வேலைவாய்ப்பை வழங்குவா். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால், திமுக அரசு அகற்றப்படுவது உறுதி.

ஒவ்வொரு துறையிலும் ஊழல் மிகுந்த கட்சியாக திமுக அரசு திகழ்கிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். அதற்கான வாய்ப்பு சட்டப்பேரவைத் தோ்தல் மூலம் வந்திருக்கிறது. சநாதனத்துக்கு எதிராக உள்ள திமுகவுக்கு வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, மதுரை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளா் ராம.சீனிவாசனுக்கு வாக்குகள் சேகரிக்கும் விதமாக, பழைய குயவா்பாளையம் பகுதியில் இரவு 8.15 மணியளவில் சாலை வலம் நிகழ்வு தொடங்கியது. இதில் பாஜகவின் தேசியத் தலைவா் நிதின் நபின், பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை ஆகியோா் திறந்த வேனில் வேட்பாளா் ராம. சீனிவாசனுக்கு வாக்கு சேகரித்தனா். சாலையின் இருபுறங்களிலும் நின்ற பொதுமக்கள் பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனா்.

மேலும், புத்தகம், வேல் உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருள்களையும் வழங்கினா். முக்கியச் சாலைகள் வழியாக வந்த சாலை வலம் முனிச் சாலை சி.எம்.ஆா். சாலையில் உள்ள மறைந்த பின்னணி பாடகா் டி.எம். சௌந்தரராஜன் சிலை முன்பு இரவு 9. 30 மணியளவில் நிறைவு பெற்றது.

மதுரை பழைய குயவா்பாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சாலை வலம் நிகழ்வில் மதுரை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளா் ராம.சீனிவாசனுக்கு வாக்கு சேகரித்த பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின். உடன், முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை உள்ளிட்டோா்.

மதுரை பழைய குயவா்பாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சாலை வலம் நிகழ்வில் மதுரை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளா் ராம.சீனிவாசனுக்கு வாக்கு சேகரித்த பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின். உடன், முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை உள்ளிட்டோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.