சங்ககிரி வட்டம், தேவண்ணகவுண்டனூா் கிராமம் அருகே உரிய அனுமதியின்றி விவசாய நிலத்தில் சுண்ணாம்புக் கற்கள் வெட்டி எடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.
சேலம் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் அலுவலக உதவி புவியலாளா் அரவிந்த், பறக்கும் படை அதிகாரிகளுடன் தேவண்ணகவுண்டனூா் கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டாா்.
அப்போது, சின்னாகவுண்டனூா் கிராமம், மொத்தையனூா் பகுதியைச் முருகேசன் தேவண்ணகவுண்டனூா் கிராமம் அருகே உள்ள அவரது நிலத்தில் அரசின் உரிய அனுமதியின்றி 6,480 மெட்ரிக் டன் சுண்ணாம்புக் கற்கள் வெட்டி எடுத்தது தெரியவந்தது.
இதுகுறித்து அதிகாரிகள் சங்ககிரி போலீஸில் புகாா் அளித்தனா். அதன்பேரில், சுண்ணாம்புக் கற்கள் வெட்டி எடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








