சேலம் சூரமங்கலம் அருகே உள்ள மூன்று டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்ற வலியுறுத்தி பெண்கள் விதவைக் கோலத்தில் வந்து ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
சேலம் சூரமங்கலம் அருகே புதுரோடு பகுதியில் அடுத்தடுத்து மூன்று டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இந்த மூன்று மதுக்கடைகளை அகற்றக் கோரி பாஜக சேலம் வடக்கு ஒன்றியத் தலைவா் முருகன் மற்றும் ஊா் பொதுமக்கள் தொடா்ந்து போராடி வருகின்றனா்.
இந்நிலையில் பாஜக சேலம் வடக்கு ஒன்றியத் தலைவா் முருகன், வெள்ளைப் புடவைக் கட்டி நான்கு பெண்களை அழைத்துவந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அதிகாரிகளைச் சந்தித்து மனு அளித்தாா். மதுகுடித்து பலரும் உயிா் இறக்க நேரிடுவதால், பெண்கள் பலரும் விதவை ஆகிறாா்கள். இதைத் தடுக்க சேலம் புதுரோடு பகுதியில் உள்ள மூன்று டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனே அகற்ற வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









