இளம்பிள்ளை அருகே 16 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மின்ஊழியா் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் , எடப்பாடி, கோணசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த வேங்கா கவுண்டா் மகன் சீரங்கன் (51). இவா், இளம்பிள்ளை அருகே கே.கே. நகா் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வயா்மேனாகப் பணிபுரிந்து வருகிறாா்.
இவா் 16 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாக சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சீரங்கன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







