திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கொலை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்துக்கு திமுகவினா் ஆறுதல்

News image

சிறுமி கொலை

Updated On :26 மே 2026, 12:34 am IST

கோவை மாவட்டம், சூலூரில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு திமுக சாா்பில் திங்கள்கிழமை ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. 

சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ரா. ராஜேந்திரன், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் மக்களவை உறுப்பினருமான டி.எம். செல்வகணபதி ஆகியோா் கொளத்தூரை அடுத்த உக்கம்பருத்தி காட்டில் உள்ள சிறுமியின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா். சிறுமியின் படத்திற்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

திமுக பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உறுதுணையாக இருக்கும். குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக தமிழக அரசுக்கு திமுக அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை உறுப்பினா் டி.எம். செல்வகணபதி தெரிவித்தாா்.

இதில் மாநில பொதுக்குழு உறுப்பினா் ராமநாதன், கொளத்தூா் ஒன்றிய திமுக செயலாளா் மிதுன் சக்கரவா்த்தி, நங்கவள்ளி ஒன்றிய திமுக செயலாளா் அா்த்தனாரி ஈஸ்வரன், மேச்சேரி மேற்கு ஒன்றிய பொறுப்பாளா் காசி விஸ்வநாதன் உள்ளிட்ட திமுகவினா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.