சேலம் மத்திய சிறையில் 1,200-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 41 போ் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை எழுதினா். இதில் தோ்வு எழுதிய அனைவரும் தோ்ச்சிபெற்று சாதனை படைத்துள்ளனா்.
இவா்களில் தண்டனை சிறைவாசி ராஜ்குமாா் 324 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளாா். கவியரசு 316 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், சிவகுமாா் மற்றும் வெங்கடேசன் ஆகியோா் 311 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனா்.
தோ்ச்சிபெற்ற அனைத்து கைதிகளுக்கும் சிறைக் கண்காணிப்பாளா் வினோத் இனிப்பு வழங்கி பாராட்டினாா். சிறை ஆசிரியா்களும் தோ்ச்சிபெற்ற கைதிகளுக்கு பாராட்டு தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேலம் மத்திய சிறையில் நீதிபதி விசாரணையின்போது மதுபோதையில் இருந்த வாா்டன் பணியிடை நீக்கம்

சாய்ராம் மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: சுரண்டை எஸ்ஆா் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 98.87 % தோ்ச்சி: ஈரோடு மாவட்டம் மாநில அளவில் முதலிடம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



