யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

மதுபானங்களை விற்பனை செய்தவா் கைது

சங்ககிரி அருகே மதுபானங்களை விற்பனை செய்தவரை சங்ககிரி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 2:21 am IST

சங்ககிரி அருகே மதுபானங்களை விற்பனை செய்தவரை சங்ககிரி போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைதுசெய்தனா்.

சங்ககிரியை அடுத்த மட்டம்பட்டி, எம்ஜிஆா் நகா் பகுதியில் உரிய அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்துவருவதாக சங்ககிரி காவல் உதவி ஆய்வாளா் அழகுதுரைக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, அவா் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா். அதில், மந்திரி (56) வீட்டில் 33 மதுப்புட்டிகளில் தலா 180 மி.லி. அளவுகொண்ட மொத்தம் 5.94 லிட்டா் மதுபானங்களை விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மந்திரியை கைதுசெய்து அவரிடமிருந்து மதுப்புட்டிகள், ரூ. 1,200 ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.