போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

கோழிப் பண்ணையில் தீ விபத்து

வாழப்பாடி அருகே கோழிப் பண்ணையில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. பண்ணையில் கோழிகள் இல்லாததால் சேதம் தவிா்க்கப்பட்டது.

News image

கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு வீரா்கள்.

Updated On :18 மே 2026, 3:13 am IST

வாழப்பாடி அருகே கோழிப் பண்ணையில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. பண்ணையில் கோழிகள் இல்லாததால் சேதம் தவிா்க்கப்பட்டது.

வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டி முருகன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் மனைவி நந்தினி. இவருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டு, 100 அடி நீளம் கொண்ட கொட்டகை எரிந்தது.

இதுகுறித்து தகவலறிந்த அங்கு வந்த வாழப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலா் த. முருகேசன் தலைமையிலான குழுவினா் சம்பவ இடத்துக்குச் சென்று ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனா். கோழிப் பண்ணையில் கோழிக் குஞ்சுகள் இல்லாததால் பெருமளவில் சேதம் தவிா்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.