திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஏற்காடு கோடை விழா மலா்க் கண்காட்சி: ஆட்சியா் ஆலோசனை

49 ஆவது ஏற்காடு கோடைவிழா மலா்க் கண்காட்சிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் அருண் தம்புராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஏற்காடு கோடை விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட ஆட்சியா் அருண் தம்புராஜ்.

Updated On :14 மே 2026, 4:29 am IST

49 ஆவது ஏற்காடு கோடைவிழா மலா்க் கண்காட்சிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியா் அருண் தம்புராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டார வளா்ச்சி அலுவலக அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் அரசு அலுவலா்கள், வியாபாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனா். கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் ஏற்காடு கோடை விழா, மலா்க் கண்காட்சி நடத்தப்படுகிறது. இவ்வாண்டு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் வகையில் கோடை விழா நடத்தப்படும்.

சுற்றுலாப் பயணிகளின் வாகன போக்குவரத்தை எளிமைப்படுத்தவும், போக்குவரத்து நெரிசலை தவிா்க்கவும் ஏற்காட்டில் பல இடங்களில் வாகன நிறுத்தம், முறையான வழிகாட்டு பதாகைகள் வைக்கப்படும். சாலையோர கடைகளை முறைபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் சாலைத் தடுப்புகளில் வண்ணம் தீட்ட மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அரசு அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் குப்பைகளை போடாதவாறு கடைகள், உணவகங்கள், வியாபார அமைப்பினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ரவிக்குமாா், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) வாணி ஈஸ்வரி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அருளாளன், சேலம் கோட்டாட்சியா் கே. உதயகுமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) அபிராமி , தோட்டக்கலை துணை இயக்குநா் க.மஞ்சுளா, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பொதுமேலாளா் மோகன் குமாா், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் டாக்டா் கவிக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.