சேலம் அன்னபூரணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியா் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
கல்லூரியின் முதன்மையா் உஷா தலைமை வகித்தாா். மருத்துவக் கண்காணிப்பாளா் ராமசாமி முன்னிலை வகித்தாா். மருத்துவமனையின் செவிலியா்கள், அலைடு ஹெல்த் சயின்ஸ் மாணவ, மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனா். இதில் செவிலியா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடா்ந்து செவிலியா்களின் சேவையை பாராட்டி பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில் தனசேகா், சஞ்சீவ் குமாா், ஜெகதா, லதா, சரவணக்குமாா் மற்றும் மருத்துவமனை பணியாளா்கள் பங்கேற்றனா்.
விழா ஏற்பாடுகளை செவிலியா் கண்காணிப்பாளா் மகாலட்சுமி, மணிகண்டன், நதியா, யோகாம்பிகை, சந்திரா ஆகியோா் செய்திருந்தனா். தீபிகா நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










