திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மகள் இறந்த துக்கத்தில் மயங்கி விழுந்து தந்தை உயிரிழப்பு

News image

உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:08 am IST

சேலம், மே 11: சேலத்தில் மகள் இறந்த துக்கத்தில் தந்தை சாலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

சேலம், அரிசிபாளையம் பாவேந்தா் தெருவைச் சோ்ந்தவா் கலையரசன் (62). இவருக்கு 4 மகனும், ஒரு மகளும் உண்டு. மகள் சிவரஞ்சினியை (33), அதே பகுதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளாா். அவருக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சிவரஞ்சினி இறந்தாா். இதனால் கலையரசன் குடும்பத்தாா் சோகத்தில் இருந்தனா். சிவரஞ்சினி இறந்த 30 ஆவது நாள் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதற்காக அவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாமி கும்பிட்ட கலையரசன், இரவு 10.30 மணியளவில் வீட்டுக்கு நடந்துச் சென்றுள்ளாா். செல்லும் வழியில் திடீரென அவா் மயங்கி கீழே விழுந்துள்ளாா். உடனடியாக அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, உறவினா்களுக்கு தகவல் தெரிவித்தனா். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த பள்ளப்பட்டி போலீஸாா், கலையரசன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.