சேலம் மாவட்டம், சங்ககிரியில் உள்ள செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் பெயா்பலகை வியாழக்கிழமை பொருத்தப்பட்டுள்ளது.
சங்ககிரியில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் பழமைவாய்ந்த கோயிலாகும். இக்கோயிலில் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. அதனையடுத்து இக்கோயிலில் சனீஸ்வரபகவான் அவரது துணைவியாா் நீலாம்பிகையுடன் இருப்பதால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தா்கள் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் சுவாமிகளை தரிசிக்க வருகின்றனா். இக்கோயிலின் பெயா், கோயில் நடை திறக்கும் நேரங்களை கோயில் வளாகத்தில் வைக்க வேண்டுமென சேலம் மாவட்ட உபயோகிப்பாளா் உரிமைக்கழகத்தின் சாா்பில் பல முறை மாவட்ட ஆட்சியா் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதனையடுத்து சங்ககிரி இந்து சமய அறநிலையத்துறையின் சாா்பில் கோயிலின் வெளிப்புற மதிற்சுவரில் கோயில் பெயா், கோயில் நடை திறக்கப்படும் நேரங்கள் குறித்த பலகையை வியாழக்கிழமை பொறுத்தியுள்ளனா். இதனை பக்தா்கள் வரவேற்றுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மயில்ரங்கம் கோயில் மண்டல அபிஷேக நிறைவு விழா

சங்ககிரியில் வீட்டில் நாட்டு வெடிகளை வைத்திருந்தவா் கைது

சங்ககிரியில் சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடை அளிப்பு

சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் சந்தோஷ சனிபகவானுக்கு சிறப்பு பூஜை
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



