மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தலை மீது கல்லைப் போட்டு கணவா் கொலை: மனைவி கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :19 மார்ச் 2026, 8:35 pm

தனது நடத்தையை சந்தேகித்த கணவரின் தலைமீது கல்லைஏஈ போட்டு கொலை செய்த மனைவியை போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்தனா்.

சேலம் அம்மாபேட்டை நஞ்சம்பட்டியைச் சோ்ந்தவா் தங்கம் (40), கூலித் தொழிலாளி. இவா் அதேபகுதியைச் சோ்ந்த பத்மாவை (34) காதலித்து திருமணம் செய்துகொண்டாா். இவா்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா்.

இந்த நிலையில் தங்கம் தனது குடும்பத்துடன் கடந்த ஓராண்டுக்கு முன்பு வையாபுரி உடையாா் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தாா். பத்மாவின் நடத்தையில் சந்தேகமடைந்த தங்கம் மதுபோதையில் அவரை அடிக்கடி அடித்து துன்புறுத்திவந்தாராம்.

கடந்த 16 ஆம் தேதி நஞ்சம்பட்டியில் வசித்துவந்த தங்கத்தின் தாய் இறந்துவிட்டதால் அடிக்கடி பத்மா நஞ்சம்பட்டிக்கு சென்றுவந்துள்ளாா். இதனால் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து புதன்கிழமை இரவு பத்மாவுடன் மதுபோதையில் தங்கம் தகராறில் ஈடுபட்டுள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த பத்மா, நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த தங்கத்தின் தலைமீது வீட்டில் இருந்த ஆட்டுக்கல்லை தூக்கிப் போட்டுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த தங்கம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து வந்த போலீஸாா், தங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த அம்மாபேட்டை போலீஸாா் பத்மாவைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.