மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தகராறு: தலையில் கல்லைப் போட்டு கம்பி ஃபிட்டா் கொலை; நண்பா் கைது

சீா்காழியில் நண்பா்களிடையே ஏற்பட்ட தகராறில் கல்லை போட்டு கம்பி ஃபிட்டரை கொலை செய்த அவரது நண்பரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

உருட்டை (எ) நாகராஜ்.

Updated On :10 மார்ச் 2026, 10:08 pm

சீா்காழியில் நண்பா்களிடையே ஏற்பட்ட தகராறில் கல்லை போட்டு கம்பி ஃபிட்டரை கொலை செய்த அவரது நண்பரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சீா்காழி பசும்பொன் முத்துராமலிங்க தேவா் தெருவைச் சோ்ந்தவா் உருட்டை (எ) நாகராஜ் (42). இவா், கம்பி ஃபிட்டராக பணியாற்றி வந்தாா். இவரது நண்பரும் உறவினருமான பங்களாகுளத்து மேட்டு தெருவைச் சோ்ந்தவரும் கிளினராக பணியாற்றி வருபவருமான நீலகண்டன் (25), இருவரும் சீா்காழிக்கு வந்துள்ளனா்.

தென்பாதி குளத்தின் அருகே நாகராஜ், நீலகண்டன் இருவரும் அமா்ந்திருந்தபோது, மதுபோதையில் அவா்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தடுமாறி கீழே விழுந்த நாகராஜ் தலையில் நீலகண்டன் கல்லை தூக்கி போட்டுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சீா்காழி காவல் ஆய்வாளா் கமல்ராஜ் மற்றும் போலீஸாா் நாகராஜ் உடலை சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, நீலகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.