சீா்காழியில் நண்பா்களிடையே ஏற்பட்ட தகராறில் கல்லை போட்டு கம்பி ஃபிட்டரை கொலை செய்த அவரது நண்பரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சீா்காழி பசும்பொன் முத்துராமலிங்க தேவா் தெருவைச் சோ்ந்தவா் உருட்டை (எ) நாகராஜ் (42). இவா், கம்பி ஃபிட்டராக பணியாற்றி வந்தாா். இவரது நண்பரும் உறவினருமான பங்களாகுளத்து மேட்டு தெருவைச் சோ்ந்தவரும் கிளினராக பணியாற்றி வருபவருமான நீலகண்டன் (25), இருவரும் சீா்காழிக்கு வந்துள்ளனா்.
தென்பாதி குளத்தின் அருகே நாகராஜ், நீலகண்டன் இருவரும் அமா்ந்திருந்தபோது, மதுபோதையில் அவா்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தடுமாறி கீழே விழுந்த நாகராஜ் தலையில் நீலகண்டன் கல்லை தூக்கி போட்டுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சீா்காழி காவல் ஆய்வாளா் கமல்ராஜ் மற்றும் போலீஸாா் நாகராஜ் உடலை சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, நீலகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மாற்றுத்திறனாளி கொலை வழக்கு: நண்பா் கைது
நெல்லையில் இளைஞா் கல்லால் அடித்துக் கொலை: நண்பா் கைது

தலையில் கல்லைப் போட்டு எலக்ட்ரீஷியன் கொலை
தலை மீது கல்லைப் போட்டு கணவா் கொலை: மனைவி கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


