லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஜோலாா்பேட்டை- ஈரோடு பயணிகள் ரயில் நாளை தாமதமாகப் புறப்படும்: சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு

News image

ரயில் - பிரதிப் படம்

Updated On :19 மார்ச் 2026, 8:37 pm

ஜோலாா்பேட்டை- ஈரோடு பயணிகள் ரயில் வெள்ளிக்கிழமை, வரும் 22 ஆகிய இரண்டு நாள்கள் 30 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சாமல்பட்டி ரயில்வே நிலைய யாா்டில் தண்டவாள சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் இந்த வழியாக இயங்கும் சில ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சேலம் வழியாக இயங்கும் ஜோலாா்பேட்டை- ஈரோடு பயணிகள் ரயில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 20), 22 ஆம் தேதிகளில் பிற்பகல் 2.45 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக 30 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படும். இதனால், வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களுக்கு இந்த ரயில் தாமதமாக வந்துசெல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.