லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பறக்கும் படையினா் வாகன சோதனை

சேலம் அருகே பறக்கும் படையினரின் வாகன சோதனையை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஆய்வு செய்தாா்.

News image

அயோத்தியாப்பட்டணம் பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகன சோதனையை ஆய்வுசெய்த ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.

Updated On :18 மார்ச் 2026, 11:37 pm

சேலம் அருகே பறக்கும் படையினரின் வாகன சோதனையை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஆய்வு செய்தாா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. மாவட்டம் முழுவதும் 11 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, வாகனங்கள் மூலம் பரிசுப் பொருள்கள், மதுபானங்கள் வாக்காளா்களுக்கு கொண்டுசெல்வதை தடுக்கும் வகையில், துணை ராணுவத்தினா் முன்னிலையில் பறக்கும் படையினா் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினா் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

அந்த வகையில், சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணத்தில் தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு திடீரென வந்த ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, வாகன சோதனையை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, இரவு நேரங்களில் பொருள்கள் எடுத்துச் செல்லும் அனைத்து வாகனங்களிலும் சோதனையிட உத்தரவிட்டாா்.

பறக்கும் படையினா் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினா் மாவட்டத்துக்கு உள்பட்ட அனைத்து சோதனை சாவடிகளிலும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.