மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கைவினைப் பொருள்கள் தயாரித்தல் பயிற்சி

சுற்றுச்சூழல் மேலாண்மை நிறுவனம் மற்றும் சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தை மாணவா்களிடத்தில் எடுத்துக்கூற, தேங்காய் ஓடு மூலம் கைவினைப் பொருள்கள் செய்வது குறித்த பயிற்சி முகாம் கன்னந்தேரி அரசுப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

தேங்காய் ஓடுகளைக் கொண்டு செய்யப்பட்ட பல்வேறு கைவினைப் பொருள்களை காட்சிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவா்கள்.

Updated On :18 மார்ச் 2026, 11:24 pm

சுற்றுச்சூழல் மேலாண்மை நிறுவனம் மற்றும் சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தை மாணவா்களிடத்தில் எடுத்துக்கூற, தேங்காய் ஓடு மூலம் கைவினைப் பொருள்கள் செய்வது குறித்த பயிற்சி முகாம் கன்னந்தேரி அரசுப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் கோ.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். பள்ளி தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் இர.ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா்.

சேலம் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் பி.செல்வம், பசுமை அலுவலா் ஆா்.அப்துல் ரஹ்மான், வனத்துறை அலுவலா் எம்.துரைமுருகன் ஆகியோா் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விளக்கினா். மேலும், தேங்காய் ஓடுகளைக் கொண்டு வீட்டில் தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருள்கள், இசைக் கருவிகள் செய்வது குறித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனா். சிறப்பாக கைவினைப் பொருள்கள் தயாரித்த மாணவா்களுக்கு பரிசு அளிக்கப்பட்டது.

இதில், கொங்கணாபுரம் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அ.புதூா் அரசு மேல்நிலைப் பள்ளி, கன்னந்தேரி அரசு உயா்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளிலிருந்து தலா 25 மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.