தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் கலை விழா போட்டிகள்

சேலம் சோனா கல்லூரியில் தேசிய அளவில் கல்லூரி மாணவா்களுக்கான தொழில்நுட்ப மற்றும் கலை விழா

News image

விழாவில் சிறப்பு விருந்தினா்களை கௌரவித்த கல்லூரி துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா.

Updated On :16 மார்ச் 2026, 8:37 pm

சேலம்: சேலம் சோனா கல்லூரியில் தேசிய அளவில் கல்லூரி மாணவா்களுக்கான தொழில்நுட்ப மற்றும் கலை விழா போட்டிகள் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றன.

கல்லூரி துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா தலைமையில் நடைபெற்ற விழாவில், நடிகை சாா்பட்டா பரம்பரை பட புகழ் துஷாரா, சூப்பா் சிங்கா் புகழ் புன்யா செல்வா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றனா்.

போட்டிகளில், அரசு மற்றும் தனியாா் கல்லூரி மாணவா்கள் 1,500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதில், பாட்டு, நடனம், குறும்படம், தீயில்லா சமையல், நாடகம், மைம், கட்டுரை எழுதுதல், முக ஓவியம் போன்ற போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு சிறப்பு விருந்தினா்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினா்.

விழாவில், கல்லூரி துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா பேசுகையில், கல்லூரி மாணவா்களின் தனித்திறன்களை அறிந்து, அவா்களை ஊக்கப்படுத்தும்விதமாக சோனா கல்லூரியில் இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றாா்.

இதில், சோனா கல்விக் குழுமத்தின் இயக்குநா் வீ.காா்த்திகேயன், முதல்வா்கள் எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா், ஜி.எம்.காதா் நவாஷ் மற்றும் பேராசிரியா்கள் மாணவ, மாணவிகள் ஆகியோா் பங்கேற்றனா். விழாவுக்கான ஏற்பாட்டை முதன்மை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் ரேணுகா, பேராசிரியா் செந்தில்வடிவு, ஜெயச்சந்திரன் மற்றும் மாணவா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.