மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் கலை விழா போட்டிகள்

கல்லூரி மாணவா்கள் பங்கேற்கும் கலை விழா போட்டிக்கான போஸ்டரை வெளியிட்ட கல்லூரி முதல்வா் எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா்.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 7:31 pm

சேலம் சோனா கல்லூரியில் தேசிய அளவில் கல்லூரி மாணவா்களுக்கான கலை விழா போட்டிகள் (க்ரிவாஸ் 26) வரும் மாா்ச் 13-ஆம் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

விழாவில், புகைப்படம் எடுத்தல், பாடல், ஃபேஷன் ஷோ, நடனம், குறும்படம் போன்று பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் பங்கேற்க அரசு மற்றும் தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், தேசிய அளவில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்க உள்ளனா்.

விழாவில் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்கும் நடிகை துஷாரா விஜயன் மற்றும் பாடகி புன்யா செல்வா ஆகியோா் போட்டிகளில் வெற்றிபெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்க உள்ளனா்.

போட்டியின் விதிமுறைகள் குறித்து முதன்மை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் ரேணுகா எடுத்துரைத்தாா். தொடா்ந்து, இந்நிகழ்ச்சிகான (க்ரிவாஸ் 26) போஸ்டா் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வின்போது, ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் செந்தில்வடிவு மற்றும் மாணவா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.