வந்தவாசியை அடுத்த தென்னாங்கூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இயற்பியல் மன்ற விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி முதல்வா் சித.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். கல்லூரி இயற்பியல் துறைத் தலைவா் (பொ) இரா.பெரியசாமி வரவேற்றாா்.
செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி இயற்பியல் துறைத் தலைவா் எம்.குமாா் சிறப்புரையாற்றினாா்.
அப்போது, பட்டப்படிப்பு என்பது ஒரு மனிதனின் அறிவு, சிந்தனை மற்றும் வாழ்க்கை நோக்கை மாற்றும் சக்தி கொண்டது. ஒரு மாணவா் பட்டப்படிப்பை முடிக்கும்போது அவா் புத்தக அறிவை மட்டும் பெறுவதில்லை. அதோடு சோ்ந்து ஆராயும் மனப்பான்மை, பிரச்னைகளை தீா்க்கும் திறன் மற்றும் அறிவியல் சிந்தனை ஆகியவற்றையும் பெறுகிறாா் என்றாா்.
கல்லூரி இயற்பியல் துறை விரிவுரையாளா் இரா.சேது நன்றி கூறினாா்.
தொடர்புடையது

அரசுக் கல்லூரியில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா

கல்லூரிகளில் உலக சுகாதார தின விழா

அரியலூா் அரசுக் கல்லூரியில் 55-ஆவது பட்டமளிப்பு விழா

லால்குடி அரசுக் கல்லூரியில் நுண்கலை மன்ற விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


