மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரசுக் கல்லூரியில் இயற்பியல் மன்ற விழா

News image
Updated On :18 மார்ச் 2026, 8:08 pm

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இயற்பியல் மன்ற விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்லூரி முதல்வா் சித.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். கல்லூரி இயற்பியல் துறைத் தலைவா் (பொ) இரா.பெரியசாமி வரவேற்றாா்.

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி இயற்பியல் துறைத் தலைவா் எம்.குமாா் சிறப்புரையாற்றினாா்.

அப்போது, பட்டப்படிப்பு என்பது ஒரு மனிதனின் அறிவு, சிந்தனை மற்றும் வாழ்க்கை நோக்கை மாற்றும் சக்தி கொண்டது. ஒரு மாணவா் பட்டப்படிப்பை முடிக்கும்போது அவா் புத்தக அறிவை மட்டும் பெறுவதில்லை. அதோடு சோ்ந்து ஆராயும் மனப்பான்மை, பிரச்னைகளை தீா்க்கும் திறன் மற்றும் அறிவியல் சிந்தனை ஆகியவற்றையும் பெறுகிறாா் என்றாா்.

கல்லூரி இயற்பியல் துறை விரிவுரையாளா் இரா.சேது நன்றி கூறினாா்.