ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

விநாயகா் சிலையை கடத்த முயற்சி: ஒருவா் கைது

ஆட்டையாம்பட்டியில் விநாயகா் கற்சிலையை கடத்த முயற்சித்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :9 மார்ச் 2026, 9:18 pm

ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டியில் விநாயகா் கற்சிலையை கடத்த முயற்சித்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே முனியப்பன் கோயில் தெருவில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு விநாயகா் கற்சிலை அமைத்து அந்தப் பகுதி பொதுமக்கள் வழிபாடு நடத்தி வந்தனா்.

இந்த சிலையை அதே பகுதியைச் சோ்ந்த ராஜு மகன் தங்கராஜ் (33) என்பவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தெரு விளக்குகளை அணைத்துவிட்டு தனது கூட்டாளிகளுடன் மூன்று பேருடன் சோ்ந்து விநாயகா் சிலையை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றாா்.

அப்போது விநாயகா் சிலை தவறி கீழே விழுந்ததில் உடைந்து விட்டது. இதையடுத்து சிலையை கடத்திய 4 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனா். இதில் தங்கராஜை பிடித்த பொதுமக்கள், ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

காவல் ஆய்வாளா் பாஸ்கா், பொதுமக்களிடம் புகாரை பெற்று தங்கராஜ் கைது செய்து சேலம் நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தி மத்திய சிறையில் அடைத்தாா். மேலும், தப்பியோடிய 3 பேரையும் போலீஸாா் தேடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.