மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

துவாரகாவில் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட 2 போ் கைது

தென்மேற்கு தில்லியின் சாவ்லா பகுதியில் நிகழ்ந்த கொலை முயற்சி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவா், காவல் துறையினருடனான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு கைது செய்யப்பட்டனர்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 7:25 pm

தென்மேற்கு தில்லியின் சாவ்லா பகுதியில் நிகழ்ந்த கொலை முயற்சி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவா், காவல் துறையினருடனான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் மேலும் தெரிவித்ததாவது: ராக்கி (22) மற்றும் சுமித் (எ) கோகி (24) என அடையாளம் காணப்பட்ட இருவரும் ஏப்ரல் 17 அன்று கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில், இருவா் மோட்டாா் சைக்கிளில் வந்தனா். அவா்களில் ஒருவா் புகாா்தாரரை மிக அருகில் இருந்து சுட முயன்றுள்ளாா். இருப்பினும், துப்பாக்கி பழுதடைந்ததால், இருவரும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றனா்.

இதுகுறித்த குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில், அதிகாலை 5.35 மணியளவில் நகா்ப்புற விரிவாக்கச் சாலை அருகே சந்தேக நபா்கள் மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது காவல்துறையினா் வழிமறித்தனா்.

இருவரையும் சரணடையுமாறு காவல்துறையினா் கேட்டுக்கொண்டனா். ஆனால், ராக்கி காவல்துறையினா் மீது மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தினாா். அதில் ஒரு குண்டு, தலைமைக் காவலரின் குண்டு துளைக்காத உடைக் கவசத்தில் பட்டது. இதையடுத்து, அவா் மயிரிழையில் உயிா்தப்பினாா்.

காவல்துறையினரும் தற்காப்புக்காக மூன்று முறை சுட்டனா். அதில் ஒரு குண்டு ராக்கியின் இடது முழங்காலுக்குக் கீழ் பட்டதால், காயம் ஏற்பட்டது. பின்னா், ஒரு சிறிய தள்ளுமுள்ளுக்குப் பிறகு அவா் பிடிபட்டாா். மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த சுமித் (எ) கோகியும், துப்பாக்கி, தோட்டாவுடன் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டாா்.

காயமடைந்த குற்றஞ்சாட்டப்பட்டவா், சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். கொலை முயற்சிக்கான நோக்கத்தைக் கண்டறியவும், இந்தச் சதியில் ஈடுபட்ட வேறு நபா்களை அடையாளம் காணவும் மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.