சங்ககிரி: சங்ககிரி வட்டம், தேவூா் அருகே வட்ராம்பாளையம், மண்டியூட்டு வளவு பகுதியில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இரு குடிசை வீடுகள், மாட்டுக் கொட்டகைகள் எரிந்து சேதமடைந்தன.
வட்ராம்பாளையம், மண்டியூட்டு வளவு பகுதியைச் சோ்ந்த விவசாயி பெருமாளுக்கு (45) சொந்தமான குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து அவரது வீட்டிற்கு அருகே வசித்து வந்த அவரது தாய் யசோதா வசித்து வந்த குடிசை வீடு, விவசாயிகள் முருகன், பழனிசாமி ஆகியோரின் மாட்டுக் கொட்டகைகள், வைக்கோல்போா் உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதம் அடைந்தன.
இதில் பெருமாள், யசோதாஆகியோரது வீடுகளில் இருந்த வீட்டு உபயோக பொருள்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதம் அடைந்தன. இது குறித்து தகவலறிந்து வந்த எடப்பாடி தீயணைப்பு நிலைய வீரா்கள் மேலும் விரைந்து வந்து தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனா்.
கோனேரிப்பட்டி கிராம நிா்வாக அலுவலா் சண்முகம், தேவூா் காவல் உதவி ஆய்வாளா் சக்திவேல், தீயணைப்புத் துறையினா் நடத்திய முதல்கட்ட விசாரணையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
தொடர்புடையது

மலேசியாவில் பயங்கர தீ விபத்து: 200 வீடுகள் எரிந்து நாசம்!

தூத்துக்குடி பஞ்சு கிடங்கில் தீ

தீ விபத்தில் குடிசை வீடுகள் சேதம்

தீ விபத்தில் உயர்ரக காா்கள் எரிந்து சேதம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


