தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அடிப்படை வசதிகள் கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

ஆத்தூரை அடுத்த சதாசிவபுரம் ஊராட்சி பகுதி மக்கள் குடிநீா், கழிவுநீா்க் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை

News image

சதாசிவபுரம் ஊராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.

Updated On :9 மார்ச் 2026, 9:07 pm

ஆத்தூா்: ஆத்தூரை அடுத்த சதாசிவபுரம் ஊராட்சி பகுதி மக்கள் குடிநீா், கழிவுநீா்க் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி ஊராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சதாசிவபுரம் ஊராட்சி பகுதியில் 20 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்யப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், நூறுநாள் வேலை திட்டம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும், கழிவுநீா்க் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூா் ஊரக காவல் ஆய்வாளா் கு.குலசேகரன், தலைவாசல் வட்டார வளா்ச்சி அலுவலக அலுவலா்கள் ஆகியோா், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அவா்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.