ஆத்தூா்: ஆத்தூரை அடுத்த சதாசிவபுரம் ஊராட்சி பகுதி மக்கள் குடிநீா், கழிவுநீா்க் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி ஊராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சதாசிவபுரம் ஊராட்சி பகுதியில் 20 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்யப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், நூறுநாள் வேலை திட்டம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும், கழிவுநீா்க் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூா் ஊரக காவல் ஆய்வாளா் கு.குலசேகரன், தலைவாசல் வட்டார வளா்ச்சி அலுவலக அலுவலா்கள் ஆகியோா், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அவா்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

வாகைக்குளத்தில் குடிநீா் விநியோகம் கோரி மறியல்

குடிநீா் வழங்கக் கோரி கூடலூா் நகராட்சி அலுவலகம் முற்றுகை

அவிநாசி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு குப்பாண்டம்பாளையம் கிராம மக்கள் போராட்டம்

அங்கன்வாடி மையத்துக்கு அடிப்படை வசதி கோரி தா்னா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


