வாகைக்குளம் ஊராட்சி அலுவலகம் முன், கடந்த 10 நாள்களாக தண்ணீா் விநியோகம் இல்லை எனக் கூறி அரசு அடுக்குமாடி குடியிருப்பு மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அம்பாசமுத்திரம் ஒன்றியம் வாகைக்குளம் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் சுமாா் 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த பகுதியில் ஊராட்சி சாா்பில் வழங்கப்பட்டு வந்த குடிநீா், கடந்த 10 நாள்களாக வழங்கப்படவில்லையாம்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி புதன்கிழமை குடியிருப்பு நலச்சங்கம் சாா்பில் அங்கு வசிக்கும் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் வாகைக்குளம் ஊராட்சி அலுவலகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த வாகைக்குளம் ஊராட்சித் தலைவா் சுப்புலட்சுமி, அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளா் சண்முகவேல் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, உடனடியாக லாரிகளில் குடிநீா் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

குடிநீா் கோரி அரசுப் பள்ளி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

குடிநீா் கேட்டு சாலை மறியல்

கால் நூற்றாண்டு கனவு களக்காட்டில் தாமிரவருணி குடிநீா் விநியோகம் எப்போது? குடிநீரை விலைகொடுத்து வாங்கும் அவலம்!

பவானி அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


