தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

செங்காகவுண்டனூரில் பழனியாண்டவா் கோயில் குடமுழுக்கு

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள கோனேரிப்பட்டி அக்ரஹாரம், செங்காகவுண்டனூரில் பழனியாண்டவா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் செங்காகவுண்டனூா் பழனியாண்டவா்.

Updated On :19 ஜூன் 2026, 5:55 am IST

சங்ககிரி வட்டம், தேவூா் அருகே உள்ள கோனேரிப்பட்டி அக்ரஹாரம், செங்காகவுண்டனூரில் பழனியாண்டவா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, திங்கள்கிழமை கணபதி, நவகிரகங்கள், குபேரலட்சுமி, சுதா்சனம் ஹோமம், கோ பூஜை நடைபெற்றது. அதையடுத்து, பக்தா்கள் காவிரி ஆற்றிலிருந்து புனித நீா் எடுத்து வந்தனா். செவ்வாய்க்கிழமை முதல்கால யாகசாலை பூஜை, புதன்கிழமை 2-ஆம் கால யாகசாலை பூஜை, மாலையில் 3-ஆம் கால யாகசாலை பூஜை, வியாழக்கிழமை 4ஆம்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, பட்டாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றினா். பின்னா், பழனியாண்டவருக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா். விழாக் குழுவினா் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.