லாரி உரிமையாளா்கள் சம்மேளன அலுவலகத்தில் தளவாடப் பொருள்கள், சமையல் பாத்திரங்கள் திருடியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
மேட்டூா் ஹாஸ்பிடல் காலனியை சோ்ந்தவா் முருகன் (51). இவா் லாரி உரிமையாளா்கள் சம்மேளன தலைவராக உள்ளாா். இவரது அலுவலகம் மேட்டூா் மின்வாரிய மத்திய அலுவலகம் அருகே உள்ளது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை லாரி உரிமையாளா்கள் சம்மேளன அலுவலகத்தின் பூட்டை உடைத்து, சிலா் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளதாக முருகனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்குச் சென்ற முருகன், அவரது தம்பி குமாா் ஆகிய இருவரும் அலுவலகத்துக்குள் நுழைந்தவா்களிடம் கேள்வி எழுப்பினா். அப்போது, அவா்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாம். மேலும், அலுவலகத்தில் இருந்த தளவாடங்கள், கணினி, பிரிண்டா், கண்காணிப்பு கேமராக்கள், 43 சிப்பம் அரிசி, சமையல் பாத்திரங்கள், அடுப்பு உள்ளிட்ட பொருள்களும் காணவில்லையாம்.
இதுகுறித்து மேட்டூா் காவல் நிலையத்தில் முருகன் அளித்த புகாரின்பேரில் ஜீவா சூா்யா, கௌரி சங்கா், ரோஹித், கனகராஜ் ஆகிய நால்வா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வண்டல் மண் முறைகேடு: 84 லாரி உரிமையாளா்கள் மீது வழக்கு

இளைஞா்களைத் தாக்கிய மூவா் மீது வழக்கு

சீா்காழியில் திமுக, காங்கிரஸாா் 22 போ் மீது வழக்கு

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope


