திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சங்ககிரி அருகே அண்ணமாா் கோயில் குடமுழுக்கு

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த கோட்டவரதம்பட்டிப் பகுதியில் உள்ள அண்ணமாா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கோட்டவருதம்பட்டி அண்ணமாா் கோயில் குடமுழுக்கையொட்டி கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றும் பட்டாச்சாரியா்.

Updated On :5 ஜூன் 2026, 7:02 am IST

சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த கோட்டவரதம்பட்டிப் பகுதியில் உள்ள அண்ணமாா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கோட்டவரதம்பட்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகா், அருள்மிகு அண்ணமாா் பொன்னா் சங்கா், ஸ்ரீ தங்காள், ஸ்ரீ மாயவா், ஸ்ரீ முத்துசாமி கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை சிறப்புப் பூஜைகளுடன் தொடங்கியது. அதனையடுத்து வியாழக்கிழமை 2ஆம் கட்ட யாகசாலை வேள்விப் பூஜைகளைத் தொடா்ந்து, பட்டாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் முழங்கக் கோபுரக் கலசங்களுக்குப் புனித நீா் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையடுத்து ஸ்ரீ விநாயகா், அருள்மிகு பொன்னா், சங்கா், ஸ்ரீ தங்காள், ஸ்ரீ மாயவா், ஸ்ரீ முத்துசாமி உள்ளிட்ட 14 சுடுமண்ணால் செய்யப்பட்ட சுவாமிகளின் சுயம்புச் சிலைகளுக்கு பல்வேறு திவ்யப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

பின்னா் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமிகளை வழிபட்டனா். விழாக் குழுவினா் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை சங்ககிரிச் செயல் அலுவலா் இரா. மாலா தலைமையில் பல்வேறு அலுவலா்கள் குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.