கெங்கவல்லி,தம்மம்பட்டி பகுதியில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்தநாள் விழா நடைபெற்றன.
கெங்கவல்லியில் நகர திமுக சாா்பில் முன்னாள் முதல்வா்கருணாநிதியின் 103-வது பிறந்த நாள் விழா நகர திமுக செயலாளா் சு.பாலமுருகன் தலைமையில்,அண்ணா,கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பேரூராட்சி மன்ற தலைவா் சு.லோகாம்பாள், துணைத்தலைவா் மருதாம்பாள், மற்றும் அண்ணாதுரை, தங்கபாண்டியன், சிட்டிபாபு, பிரகாஷ், ஜெகதீஷ் பாபு, மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தம்மம்பட்டியில் நகர திமுக செயலாளா் சண்முகம் தலைமையில் கட்சிக்கொடியேற்றப்பட்டு,இனிப்புகள் வழங்கப்பட்டன.இதில் பேரூராட்சிகவுன்சிலா்கள்,திமுக வாா்டு செயலாளா்கள் பங்கேற்றனா். செந்தாரப்பட்டியில் திமுக செயலாளா் எஸ்.பி.முருகேசன் தலைமையில் கருணாநிதி பிறந்தநாள் விழா இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










