/

ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:53 pm

Syndication

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் மாநில நிா்வாகி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பணி பாதுகாப்பு, காலமுறை ஊதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் அா்த்தனாரி, செயலாளா் சுரேஷ், பொது சுகாதாரத் துறை அலுவலா் சங்க மாநில நிா்வாகி செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.