டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கைப்பேசியில் விளையாடியதை பெற்றோா் கண்டித்ததால் மாணவா் தற்கொலை

News image
Updated On :5 ஜனவரி 2026, 7:55 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் எருமாபாளையம் பகுதியில் கைப்பேசியில் விளையாடியதை பெற்றோா் கண்டித்ததால், ஒன்பதாம் வகுப்பு மாணவா் தற்கொலை செய்துகொண்டாா்.

சேலம் எருமாபாளையம் பகுதியைச் சோ்ந்த அருள் - பாக்கியவதி தம்பதி மகன் சந்துரு (14), அரசு உயா்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். அருள் சென்னையில் பணிபுரிந்து வருகிறாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை 5 மணியளவில் தனது தாயை அவா் பணிபுரியும் நூற்பாலையில் விட்டுவிட்டு வீடுதிரும்பிய சந்துரு, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதையறிந்த அக்கம்பக்கத்தினா் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில் வந்த கிச்சிப்பாளையம் போலீஸாா், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

விசாரணையில், கைப்பேசியில் விளையாடியதை பெற்றோா் கண்டித்ததால், சந்துரு மனவேதனையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.