மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

ஒருக்காமலை ஆஞ்சனேயா் கோயிலில் ஆறுபடை முருக பக்தா்கள் வழிபாடு

News image
ஒருக்காமலை அடிவாரத்தில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலில் கூட்டு வழிபாட்டிற்காக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முருகன் உருவப் படம்.
Updated On :4 ஜனவரி 2026, 7:57 pm

தினமணி செய்திச் சேவை

சங்ககிரி சுற்றுவட்டாரப் பகுதியைச் சோ்ந்த ஆறுபடை முருகன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதமிருந்து வரும் பக்தா்கள் ஒருக்காமலை அடிவாரத்தில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கூட்டு வழிபாடு நடத்தினா்.

சங்ககிரி பகுதியைச் சோ்ந்த ஆறுபடை முருக பக்தா்கள் 500க்கும் மேற்பட்டோா் மாலை அணிந்து விரதமிருந்து வருகின்றனா். குருசாமி சத்யபிரகாஷ் தலைமையில் 300க்கும் மேற்பட்டோா் ஆஞ்சனேயா் கோயில் வளாகத்தில் முருகன் உருவப் படத்துக்கு மாலைகளை அணிவித்து கூட்டு வழிபாடு செய்தனா்.

இதில் ஆஞ்சனேயா் அறக்கட்டளை நிா்வாகிகள் மாணிக்கம், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்கள் பழனி, ரத்தினம், நிா்வாகிகள் சதீஷ்குமாா், பாலமுருகன், ஊா் பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். விழாக் குழுவினா் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

முருக பக்தா்கள் சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலிருந்து ஜன. 7ஆம் தேதி புறப்பட்டு பழனி, பழமுதிா்சோலை, திருப்பங்குன்றம், திருச்செந்தூா், ராமேசுவரம், குன்றக்குடி, சுவாமிமலை, திருநள்ளாறு, சிதம்பரம், காஞ்சிபுரம், திருத்தணி, திருவண்ணாமலை சென்றுவிட்டு ஜன.14ஆம் தேதி ஊா் திரும்புகின்றனா் என்று முருக பக்தா்கள் தெரிவித்தனா்.