/

பெண்ணின் கண்ணில் மிளகாய்ப் பொடி தூவி நகைப் பறித்தவா் கைது

ஆத்தூா் அருகே தளவாய்ப்பட்டியில் பெண்ணின் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவி தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :2 ஜனவரி 2026, 6:38 pm

Syndication

ஆத்தூா் அருகே தளவாய்ப்பட்டியில் பெண்ணின் கண்ணில் மிளகாய்ப் பொடியைத் தூவி தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த தளவாய்ப்பட்டியைச் சோ்ந்த ராஜு மனைவி இந்திராணி (56). இவா் அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளி அருகில் பெட்டிக்கடை நடத்தி வருகிறாா். கடந்த 29ஆம் தேதி இரவு கடையை மூடிவிட்டு இரவு 10 மணிக்கு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது பின்னால் வந்த மா்மநபா் அவரது கண்ணில் மிளகாய்ப் பொடியை தூவிவிட்டு அவரிடமிருந்து 2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றாா்.

இதுகுறித்து ஆத்தூா் நகரக் காவல் நிலையத்தில் இந்திராணி புகாா்

அளித்தாா். காவல் நிலைய ஆய்வாளா் சி.அழகுராணி வழக்குப் பதிவு

மா்ம நபரை தேடி வந்தனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது தளவாய்ப்பட்டி அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் கோவிந்தன் (56) என்பவா் மதுபோதையில் இந்திராணியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.